nalaeram_logo.jpg
(534)

தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்

வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்

பள்ளி கொள்ளு மிடத்தடி வொட்டிட

கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே

 

பதவுரை

கூடலே

-

கூடல் தெய்வமே!

தெள்ளியார் பலர்

-

தெளிவுடைய பக்தர்கள் பலர்

கைதொழும்

-

கைகளார வணங்கப் பெற்ற

தேவனார்

-

ஸ்வாமியாய்

வள்ளல்

-

பரமோதாரனாய்

மாலிருஞ்சோலை மணாளனார்

-

திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளியிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரமபுருஷன்

பள்ளி கொள்ளும் இடத்து

-

பள்ளி கொண்டருளுமிடத்திலே

அடி கொட்டிட

-

(அவனுடைய) திருவடிகளை நான் பிடிக்கும்படியாக

கொள்ளும் ஆகில்

-

(அவன்) திருவுள்ளம் பற்றுவனாகில்

நீ கூடிடு

-

நீ கூடவேணும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- க்ஷணகாலமும் பிரியமாட்டாமல் நிக்தியாநுபவம் பண்ணிக் கொண்டு ;fமங்களாசரஸநபரராயிருக்கும் பலபல நித்யஸூரிகள் கைதொழப் பெற்றவனாய், அந்த நித்யஸூர்கள் அநுபவிக்கும் அந்த அநுபவத்தை ஸம்ஸாரிகட்கும் அருள்புரியத் திருவுள்ளம் பற்றித் திருமாலிருஞ்சோலைமலையிலே வந்து ஸந்நிஹிகனாய் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் ழூ குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்புகாட்டித் தென்திசை இலங்கை நோக்கித் துயிலுமிடமாகிய திருவரங்கம் பெரிய கோயிலிலே சென்று புக்கு அப்பெருமானுக்குத் திருவடிவருடும்படியான பாக்கியம் இன்று நமக்கு வாய்க்குமாகில், கூடல்தெய்வமே! நீ கூடங்கடவை என்கிறாள். எம்பெருமானுடைய ஸந்நிதியிலே போய் அத்தாணிச் சேவகம் பண்ணும்படியாக விதிவாய்க்கவேணுமென்கிற ப்ரார்த்தனையைக் கூடிடுகூடலே!” என்னும் வாய்ப்பாட்டினால் அருளிச் செய்வதாகக் கொள்க. “கூடிடு கூடலே!” என்றவிடத்துக்குச் சொல்லவேண்டுமவற்றை அவதாரிகையிலே சொன்னோமாகையாலே அங்குக் காண்க.

(தெள்ளியார் பலர்) தெள்ளியாரென்றது - தெளிவுள்ளவர்களென்றபடி தெளிவாவது ‘உபாயோபேயங்களிரண்டும் அப்பெருமானே’ என்ற அக்யவஸாயம், அஃது உடையவர்கள் “கலக்கமில்லா நல்தவ முனிவர் கரை கண்டோர், துளக்கமில்லா வானவர்” என்றபடி ஆத்மஸ்வரூபம் கைவந்திருக்கும் ஸநகாதி மஹர்ஷிகளும், முக்தரும், நித்யஸூரிகளும். (தேவனார்.) தேவ: என்கிற வடசொல் (திவு) என்னும் தாதுவினடியாகப் பிறந்தகாத லால் அந்தத் தாதுவுக்குள்ள பத்துப்பொருள்களும் தேவபதத்திற்கு உண்டு. இங்கு ‘உஜ்வலன்’ என்ற பொருள் கொள்ளத்தகும். நித்ய முக்தர்கள் தாங்கள் எம்பெருமானைத் தொழுது தங்கள் ஸ்வரூபத்தை நிறம்பெறுவித்துக் கொள்ள எம்பெருமான் அவர்களைத் தொழுவித்துக் கொண்டு  உஜ்வலனாகிறான் என்க.

வள்ளல் :- மிக்க ஔதார்யகுணமுள்ளவன். “வள்ளல்” என்றவுடனே ‘மாலிருஞ்சோலைமணாளனார்’ என்கையாலே, நித்தியவிபூதியிலே நித்தியானுபவம் பண்ணுவார் அநந்தகோடிநித்யஸூரிகள் உண்டாயிருக்கச் செய்தேயும் அவர்களுடன் கூடிவாழ்ந்திருக்குமிருப்பு உண்டதுருக்காட்டாதே இங்குள்ள ஸம்ஸாரிகளின் இழவை அநுஸந்தித்து உடம்புவெளுத்து, அங்குள்ள நித்யாநுபவத்தை இங்குள்ளார்க்கும் தந்தருளவேணுமென்னும் நசையாலே திருமாலிருஞ்சோலை மலையளவும் வந்து கன்னை அநுபவிப்பிக்கைக்கு ஸமயம் எதிர்பார்த்துக்கொண்டு நிற்கும்படியைச் சொல்லிற்றாகிறது. “வள்ளல்” என்ற உதாரகுணத்தைத் திருமாலிருஞ்சோலைமலையிலே விளங்கக் காட்டுகிறபடி.

மணாளனார் :- ‘மணவாளனார்’ என்பது மருவிற்று. மணாளன் - மணக்கோலத்தோடு வந்து நிற்பவன். ஆச்ரிதர்களை அடிமைகொள்வதற்குக் குதூரிஹலமாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறது. அப்படிப்பட்ட எம்பெருமான் பள்ளிகொள்ளுமிடத்திலே யென்றது - திருவரங்கம் பெரியகோயிலிலே யென்றபடி, “பள்ளிகொள்ளுமிடமாகிறது - கோயில்” என்று பட்டரருளிச் செய்ய நான் கேட்டேன் என்று பிள்ளையழகிய மணவாளவரையர் பணிப்பர்- என்ற வயாகயாநஸ்ரீஸூக்தியை அநுஸந்திக்க.

அடிகொட்டிடக் கொள்ளுமாகில்:- “அன்றிவ்வுலகமளந்த வசவேகொல்” என்றும், “நடந்தகால்கள், நொந்தவோ” என்றும், “அடியாரல்லல் தவிர்த்த அசவோ அன்றேலிப்படிதான் நீண்டு தாவியவசவோ” என்றுமித்யாதி பாசுரங்களைப் பகர்ந்து கொண்டு திருவடிபிடிக்கும்படியாக அவ்வெம்பெருமான் என்னைத் திருவுள்ளம் பற்றுவானாகில் என்கை. ஆண்டாள், பெண்பிள்ளையான வாசிக்கு “முலையாலணைக்கப்பெறுவேனாகில்” என்று சொல்லவேண்டுமிடத்தும் “அடிகொட்டிடக்கொள்ளுமாகில்” என்கையாலே ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தியிலே அந்வயிக்க ஆசைப்பட்டமைதோற்றும். கைங்கர்யமேயிற்றே ப்ராப்திபலம். கொள்ளுமாகில் என்று அவ்வெம்பெருமானுடைய திருவருளை எதிர்பார்க்கின்றனைதோற்ற அருளிச்செய்கையாலே “ப்ராப்திக்கு உபாயம் அவன் நினைவு” என்ற ஸத்ஸம்ப்ரதாயார்த்தம் விளங்கும். நாம் எத்தனைப்ரவ்ருத்திகள் செய்த போதிலும் அவை சைதந்யகார்ய மாத்ரமேயாய் “உன்மனத்தால் என்னினைந்திருந்தாய்” என்றபடி அவனுடைய நினைவே உபாயமென்று திண்ணிதாகக் கொள்க.

கூடிடுகூடலே:- “அவனாலே பேறு’ என்றிருக்கச் செய்தேயும் அசேதகமான கூடலின் காலிலே விழும்படியிருக்கிறதிறே ப்ராப்பக்வரை” என்ற வ்யாக்யாந ஸ்ரீஸூக்தி காண்க. ஸ்ரீவசநபூஷணம் முதல் ப்ரகரணத்தில் -“அப்ராப்த விஷயங்களிலே ஸக்கனானவன் அது லபிக்கவேணுமென்றிரா நின்றால் ப்ராப்தவிஷயங்களிலே ஸக்கனானவன் அது லபிக்கவேணுமென்றிரா நின்றால் ப்ராப்தவிஷயப்ரவணனுக்குச் சொல்லவேண்டாவிறே, அநுஷ்டாநமும் அநநுஷ்டாநமும் உபாயகோடியில் அந்வயியாது. அநந்யோபாயத்வமும் அநந்யோபே யத்வமும் அந்நயதைவத்வமும் குலையும்படியான ப்ரவ்ருத்திகாணா நின்றோமிறே. ஜஞாந் விபாத்காரியமான அஜஞாநக்காலே வருமவையெல்லாம் அடிக்கழஞ்சு பெறும். உபாயபலமாய் உபேயாந்தர்ப்பூதமாயிருக்குமது உபாயப்ரதிபந்தக மாகாது. என்றருளிச்செய்க ஸ்ரீஸூக்திகளும் அவற்றின் வியாக்கியான ஸ்ரீஸூக்திகளும் இங்கே நோக்கக்தகும். ....    ....    ....   ....  (க)

 

English Translation

The Lord worshipped by bards and celestials is the affluent bridegroom of Malirumsolai. Will I fine entry into his bed-chamber? If he will come, then join, O Lord of the circle.

 
உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10


மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10


நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10


ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

 

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

 

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter



 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain