(2995)

கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான் காண்பன்அவன் கண்களாலே,

அமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி,

கமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும்தோற்றி

அமலத்தெய்வத்தோடுலகம் ஆக்கியென்நெற்றியுளானே.

 

பதவுரை

கமலம் கண்ணன்

-

புண்டரீகாக்ஷன்

என் கண்ணிணுளளான்

-

எனது கண்களுக்கு இலக்கானான்;

காண்பன்

-

(நானும் அவனைக்) காணாநின்றேன்; (இதுவரையில் அவனைக் காணப்பெறாத நான் இப்போது எங்ஙனே காணப்பெற்றேனென்னில்;)

அவன்

-

அப்பெருமான்

கண்களாலே

-

(தனது) திருக்கண்களாலே

அமலங்கள் ஆக விழிக்கும்

-

அஜ்ஞானம் முதலியமலங்கள் தொலையும்படி கடாக்ஷித்தருளினான்; (அதனாலே காணப்பெற்றேனெக்க;)

ஐம்புலனும்

-

மற்றுமுள்ள எல்லா இந்திரியங்களும்

அவன் மூர்த்தி

-

அப்பெருமானுக்கே விதேயங்களாயின; (அவன் யாவனென்னில்)

கமலத்து நம்பி அயன் தன்னை

-

தாமரையானாயும் ஜ்ஞாநாதி பரிபூர்ணனாயுமிருக்கிற பிரமனையும்

கண் நுகலானொடும்

-

நெற்றிக்கண்ணனாகிய சிவபிரானையும்

தோற்றி

-

தோற்றுவித்து (அவர்கள் முதலாக)

அமலம் தெய்வத்தோடு

-

ஸாத்விகர்களான தேவர்களோடு கூடின

உலகம்

-

உலகங்களையும்;

ஆக்கி

-

படைக்குமவன்

(ஆக இப்படிப்பட்ட எம்பெருமான்)

என் நெற்றி உளான்

-

எனது நெற்றியிலே யானான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரமன் முதலான பீபிலிகா பர்யந்தமாக ஸகல ஜகத்தையும் படைத்தருளின கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளே புகுந்தருளினான்; நானும் அவனை என் கண்களாற் காணப்பெற்றேன்; அவனும் தன்னுடைய குளிர்ந்தழகிய திருக்கண்களாலே என்னுடைய ஸகல தாபங்களும் தீரும்படி என்னைக் குளிர நோக்கியருளா நின்றான்; இப்படியே மற்றுமுள்ள செவி முதலிய காரணங்களாலும் அவனையே அநுபிக்கப்பெற்றேன். கண்ணுள்ளே அவன் வந்திருந்த இருப்பு எனக்கு ஸாத்மித்தவாறே பின்னை என் நெற்றியுள் நின்றருளினான் என்றாராயிற்று.

அமலங்களாக விழிக்கும் = இதுவரையில் அவனைக்காண முடியாதபடி தோஷங்கள் நிரம்பிக்கிடந்தன. அவை அவது கடாக்ஷவீக்ஷணமடியாக மாய்ந்தனவாதலால் இன்று காணப்பெற்றேன் என்று கருத்து.

ஐம்புலனும் அவன்மூர்த்தி = செவி வாய் கண் மூக்கு உடல் என்பன ஐம்புலன்கள்; முதலடியில் காண்பன் என்றமையால் கண் பகவத் விஷயத்திலே ப்ரவணாமனமை அங்கே சொல்லப்பட்டதாதலால் மற்ற நான்கு கரணங்களும் அந்தக் கண்போலவே அவ் விஷயத்திலேயே அவகாஹித்தமை சொல்லுதல் இங்கு விவக்ஷிதம். கீழ்நாள்களிலெல்லாம் :விஷயாந்தரங்களில் ஊன்றிக்கிடந்த கரணங்கள் யாவும் இன்று அவனிட்ட: வழக்காம்படி: அவனுக்கு விதேயமாய் அங்கே பணி போந்தனவென்கை.

 

English Translation

He created the lotus-born Brahma and the forehead-eyed Siva. He created the pure gods and all their worlds.  I see the lotus-eyed Lord in my eyes, he too sees me clearly.  He is in my forehead.

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter



 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain