(69)
காய மலர்நிறவா கருமுகில் போலுருவா கானக மாமடுவில் காளிய னுச்சியிலே
தூய நடம்பயிலும் சுந்தர என்சிறுவா துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே
ஆய மறிந்துபொரு வான்எதிர் வந்தமல்லை அந்தர மின்றியழித் தாடிய தாளிணையாய்
ஆய எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
பதவுரை
காயமலர் |
- |
காயாம்பூப் போன்ற |
நிறவா |
- |
நிறத்தையுடையவனே! |
கருமுகில் போல் |
- |
காளமேகம் போன்ற |
உருவா |
- |
ரூபத்தையுடையவனே |
கானகம் |
- |
காட்டில் |
மாமடுவில் |
- |
பெரிய மடுவினுள்ளே கிடந்த |
காளியன் |
- |
காளியநாகத்தினுடைய |
உச்சியிலே |
- |
தலையின்மீது |
தூய |
- |
மனோஹரமான |
நடம் |
- |
நர்த்தநத்தை |
பயிலும் |
- |
செய்தருளின |
சுந்தர |
- |
அழகையுடையவனே! |
என் சிறுவா |
- |
எனக்குப் பிள்ளையானவனே! |
துங்கம் |
- |
உன்னதமாய் |
மதம் |
- |
மதத்தையுடைத்தான |
கரியின் |
- |
குவலயாபீடமென்னும் யானையினது |
கொம்பு |
- |
தந்தங்களை |
பறித்தவனே |
- |
முறித்தருளினவனே! |
ஆயம் அறிந்து |
- |
(மல்ல யுத்தம்) செய்யும் வகையறிந்து |
பொருவான் |
- |
யுத்தம் செய்வதற்காக |
எதிர்வந்த |
- |
எதிர்த்துவந்த |
மல்லை |
- |
மல்லர்களை |
அந்தரம் இன்றி |
- |
(உனக்கு) ஒரு அபாயமுமில்லாதபடி |
அழித்து |
- |
த்வம்ஸம்செய்து |
ஆடிய |
- |
(இன்னம் வருவாருண்டோ என்று) கம்பீரமாய் ஸஞ்சரித்த |
தான் இணையாய் |
- |
திருவடிகளை யுடையவனே! |
ஆய |
- |
ஆயனே! |
எனக்கு. . . ஆடுக-. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** - காளியனுச்சியில் நடம்பயின்றதும் மதக்கரியின் கொம்பு பறித்ததும் மல்லர்களை அழித்ததும் செங்கீரையாடும் பருவத்திற்கு வெகுநாள் கழித்தபின் நடந்த செய்திகள் ஆகையாலே இந்தச் செய்திகளை யெடுத்துச் சொல்லி யசோதைப் பிராட்டி “ஆடுக செங்கீரை” என்று பிரார்த்தித் திருக்கமாட்டாளே; “அன்னநடை மடவாளசோதை யுகந்தபரிசு ஆனபுகழ்ப் புதுவைப் பட்டனுரைத்த தமிழ்” என்கிற இவ்வாழ்வார் அந்தச் செயல்களையும் கூட்டிக்கொண்டு எப்படி அருளிச்செய்கிறாரென்று சிலர் சங்கிப்பர்; கேண்மின்; இவ்வாழ்வார் எம்பெருமானருளாலே மயர்வற மதிகலமருளப் பெற்றவராகையாலே இவர்க்கு அப்பெருமானுடைய ஸ்வரூப ரூபகுண சேஷ்டிதங்களெல்லாம் ஒருசேர ப்ரகாசிப்பதனாலே எதிர்காலத்தில் நடக்கும் செய்கைகளையும் மற்றை அவதாரங்களின் செய்கைகளையும் பரத்வம் முதலியவற்றின் தன்மைகளையும் அர்ச்சாவதாரங்களில் தோன்றுகிற குணசேஷ்டிகளையும் சேர்த்துக் கூறுகின்றாரென்றுணர்க. இந்த ஸமாதானம் இப்பாட்டுக்கு மாத்திரமல்ல; கீழும் மேலுமுள்ள பல பாட்டுக்களுக்குமாம்.
மூன்றாமடியில் ஆயம் - வேலைத்திறம். அந்தரமின்றி என்பதற்கு - மல்ல யுத்தம் செய்யும்போது ஓருடலுக்கும் மற்றோருடலுக்கும் இடைவெளியில்லாமல் நெருங்கிப் பொருது என்றும் உனக்கொரு அபாயமின்றிப் பொருது என்றும் உரைக்கலாம். “காயாமலர்” என்பது காயமலரென்று குறுக்க விகாரம் பெற்றது.
English Translation
O, Dark Kaya-hued Lord, resembling a dark cloud! O, My beautiful child, you danced in ecstacy on the serpent Kaliya’s head in the deep forest glen, with your pure feet. You plucked the tusk from the great elephant Kuvalayapida. Without a match you killed the fierce wrestlers in contest. O, My Lord, dance! Dance the Senkirai.