(1018)
கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான்,
சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன்,
பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம், பொங்குநீர்ச்
செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடமடை நெஞ்சமே.
பதவுரை
|
கொங்கு அலர் ந்த மலர் குருந்தம் ஒசித்த |
- |
பரிமளம் வீசுகின்ற பூக்கள் நிறைந்த குருந்த மரத்தை முறித்தழித்த |
|
கோவலன் |
- |
கோபால க்ருஷ்ணனாய் |
|
எம்பிரான் |
- |
அஸ்மத்ஸ்வாமியாய் |
|
சங்கு தங்கு தட கடல் துயில் கொண்ட |
- |
சங்குகள் தங்கியிருக்கிற பெரிய கடலிலே திருக்கண் வளர்கின்ற |
|
தாமரை கண்ணினன் |
- |
புண்டரீகாக்ஷனாய், |
|
பொங்கு புள்ளினை வாய் பிளந்த |
- |
செருக்குடன் கிளர்ந்து வந்த பகாஸூரன் வாயைக் கிழித்தெறிந்த |
|
புராணர்தம் இடம் |
- |
புராண புருஷனான ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியிருக்கு மிடமாயும் |
|
பொங்கு நீர் |
- |
நீர்வளமுடையதாய் |
|
செம் கயல் திளைக்கும் |
- |
சிவந்த மீன்கள் களித்து வாழப்பெற்ற |
|
சுனை |
- |
சுனைகளையுடையதாயுமிருக்கிற |
|
திருவேங்கடம் |
- |
திருமலையை |
|
நெஞ்சமே அடை |
- |
நெஞ்சே! நீ அடைந்திடு. |
English Translation
My Lord Gopala who broke the fragrant blossoming Kurundu tree, my lotus-eyed Lord who reclines in the conch-filled ocean-deep, my Lord of the Puranas who ripped the jaws of the demon horse Kesin,- He resides amid tanks brimming with fish; in Tiruvenkatam, thitherward, O Heart!






