(1017)
செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய,
எங்களீசனெம்பிரானை இருந் தமிழ்நூல் புலவன்,
மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன்,
செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே.
பதவுரை
|
செம்கண் ஆளி |
- |
சிவந்த கண்களையுடைய சிங்கங்கள் |
|
இட்டு |
- |
(தமக்குக் கிடைத்த யானைத் தந்தம் முதலியவற்றைத்) திருவடிகளிலே ஸமர்ப்பித்து |
|
இறைஞ்சும் |
- |
வணங்குமிடமான |
|
சிங்க வேழ் குன்று உடைய |
- |
சிங்கவேழ் குன்றத்தை இருப்பிடமாகவுடையனாய் |
|
எங்கள் ஈசன் |
- |
ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் ஸ்வாமியாய் |
|
எம் பிரானை |
- |
நமக்கு உபகாரகனாயுமுள்ள ஸ்ரீ நரஸிம்ஹமூர்த்தி விஷயமாக, |
|
இரு தமிழ் நூல் புலவன் |
- |
பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்லவராய் |
|
மங்கை ஆளன் |
- |
திருமங்கை நாட்டுக்குத் தலைவராய் |
|
மன்னு தொல்சீர் |
- |
நித்யஸித்தமான ஸ்ரீ வைஷ்ணவலஷ்மியை உடையவராய் |
|
வண்டு அறைதார் |
- |
வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை யணிந்தவராய் |
|
செம் கை ஆளன் |
- |
மிக்க உதாரரான |
|
கலியன் |
- |
ஆழ்வாரருளிச்செய்த |
|
செம் சொல் மாலை |
- |
செவ்விய இச்சொல் மாலையை |
|
வல்லவர் |
- |
ஓதவல்லவர்கள் |
|
தீது இலர் |
- |
தீமை யொன்றுமின்றி நன்மை பெற்றவராவர். |
English Translation
The red eyed lions worship with offerings our Lord of Singavel-Kundram. He is our Lord and master, praised with songs by the poet of pure Tamil, benevolent king of Mangai-tract, kaliyan, who wears a bee-humming garland. Those who master it will be free of evil.




