(1017)

செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய,

எங்களீசனெம்பிரானை இருந் தமிழ்நூல் புலவன்,

மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன்,

செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே.

 

பதவுரை

செம்கண் ஆளி

-

சிவந்த கண்களையுடைய சிங்கங்கள்

இட்டு

-

(தமக்குக் கிடைத்த யானைத் தந்தம் முதலியவற்றைத்) திருவடிகளிலே ஸமர்ப்பித்து

இறைஞ்சும்

-

வணங்குமிடமான

சிங்க வேழ் குன்று உடைய

-

சிங்கவேழ் குன்றத்தை இருப்பிடமாகவுடையனாய்

எங்கள் ஈசன்

-

ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் ஸ்வாமியாய்

எம் பிரானை

-

நமக்கு உபகாரகனாயுமுள்ள ஸ்ரீ நரஸிம்ஹமூர்த்தி விஷயமாக,

இரு தமிழ் நூல் புலவன்

-

பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்லவராய்

மங்கை ஆளன்

-

திருமங்கை நாட்டுக்குத் தலைவராய்

மன்னு தொல்சீர்

-

நித்யஸித்தமான ஸ்ரீ வைஷ்ணவலஷ்மியை உடையவராய்

வண்டு அறைதார்

-

வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை யணிந்தவராய்

செம் கை ஆளன்

-

மிக்க உதாரரான

கலியன்

-

ஆழ்வாரருளிச்செய்த

செம் சொல் மாலை

-

செவ்விய இச்சொல் மாலையை

வல்லவர்

-

ஓதவல்லவர்கள்

தீது இலர்

-

தீமை யொன்றுமின்றி நன்மை பெற்றவராவர்.

 

English Translation

The red eyed lions worship with offerings our Lord of Singavel-Kundram. He is our Lord and master, praised with songs by the poet of pure Tamil, benevolent king of Mangai-tract, kaliyan, who wears a bee-humming garland. Those who master it will be free of evil.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter



 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain